Monday, August 28, 2017

தெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு இருக்கண்குடி

தெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில் புண்ணிய ஸ்தல வரலாறு
இருக்கண்குடி

ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணம் சசிவர்ணம் சதர்புஷம் பிரசண்ணவதணம்
தியாகே விக்ணோப சாந்தி

ஓம் நம சிவாய

ஸெளராஷ்ட்ரெ ஸோமநாதஞ் ஸ்ரீசைலே மல்லிகார்ஜீனம்
ஊஜ்ஜய்ன்யாம் மகாகாளம் ஓங்காரம் அமலேஷ்வரம்
பரல்யாம் வைத்தியநாதஞ்ச டாகின்யாம் பீமசங்கரம்
ஸேதுபந்தேது ராமேஷம் நாகேஷம் தாருகாவனே
வாரணாஷ்யம்து விஷ்கேவஷம் த்ரயம்பகம் கௌதமிதடே
இமாலயேது கேதாரம் குஷ்ணேஷம் சிவாலயே
ஆய்வாளர் : பெ.மாரிச்செல்வம் இ.க.தமிழ்
தகவல் : 1. பெ.பழனிமுருகராஜா, 2.ஜெ.குருசாமி, 3.வ.இருளப்பாராஜா, 4.க.மாரிமுத்து
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகங்கை ஜில்லா கொல்லபட்டி ஜமீன் ஆளுகைக்குட்பட்டது தெக்குபட்டி கிராமம். அங்கு அமையபெற்றது தான் ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில். இக்கிராமத்தில் பல இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சில குடும்பர்(பள்ளன்)இன மக்களும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இத்திருக்கோவிலில் 21 தெய்வங்கள் உள்ளன. இவற்றில் 7 தெய்வம் ராஜாவாகவும்; 4 தெய்வங்கள் அம்மாவாகவும் 2 தெய்வங்கள் மந்திரிகளாகவும் 8 தெய்வங்கள் காவல்காரர்களாகவும் அமையபெற்றுள்ளது.






திருக்கோவிலில் திருவிழாகாலங்களில் கொல்லபட்டியில் உள்ள முதற்படி சந்நதியிலிருந்து ஆராதணை ஆரம்பித்து தெக்குப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி ஆட்டம் ஆடி சென்றுள்ளனர். பின்பு அத்திருக்கோவிலில் பொங்கல் வைத்து ஆராதணை செய்து பொங்கல் பாணையை ராஜா தெய்வத்தின் தலையில் வைத்து காவல் தெய்வங்கள் காவலில முதற்படி கொவிலுக்கு கொண்டுசெல்வார்கள். இவ்வாறு திருவிழா நடைபெறும்.
இதில் காவல் தெய்வங்கள் ஆடுபவர்கள் குடும்பர் இன மக்கள் ராஜா தெய்வங்கள் ஆடுபவர்கள் ஜமீன்தரர்கள். குடும்பர் இன மக்களின் காவலில் நாம் வரக்கூடாதென்ற இலிவான என்னம் கொண்டு குடம்பர் இன மக்கள் சாமி கும்பிட வருவதை தடுத்துவிட்டனர். இதை தெய்வத்திடம் முறையிட்டு கும்பிட்டு நிங்கள் எங்களுடன் வந்தவிடவெண்டுமென்று கூறி பிடி மண்ணை எடுத்துக்கொண்டு தெக்குபட்டி கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்
தெக்குபட்டியிலிருந்து வெளியேறி கிழக்குநோக்கி நகர்ந்து வந்து ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே கோவில் கட்டி அங்கேயே குடில்கள் அமைத்து வசித்துவந்தனர். அந்த ஊர் எருக்களங்குடி அங்கே எருக்களஞ்செடிகள் அதிகமாக இருந்ததால் அப்பெயர் பெற்றது இதுவே தற்கால இருக்கண்குடி
பின்பு வசதியின் காரணமாக அவர்கள் மெற்கு நோக்கி வந்து தங்கினர் அங்கு சில குடும்பர் இன மக்களும் ஒரு வேளார் மணையும் ஒரு ஆசாரி மணையும் ஏற்கனவே இருந்தது அவர்களுடன் இவர்களும் இணைந்து வசித்துள்ளனர் தற்பொழுது இருக்கண்குடியில் அமைந்துள்ள கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கடைசி வெள்ளி அன்று இரவு முழுவதும் ஆராதணை நடைபெரும்
தெய்வங்களின் பெயர்கள் :
  1. புதியவராஜா
  2. வெள்ளையராஜா
  3. சின்னத்தம்பிராஜா
  4. சுந்தரராஜா
  5. நீலமேகராஜா
  6. வனராஜா
  7. சீதாராமராஜா
  8. இளையபெருமாள்
  9. ராஜகாளியம்மன்
  10. மந்திரமூர்த்தி
  11. பெச்சியம்மன்
  12. ராக்காச்சியம்மன்
  13. பாதாளகண்டி
  14. அக்னிஇருளப்பசாமி
  15. மதுரைவீரன்
  16. மாசாணமுத்து
  17. பாதாளராக்கு
  18. வைரவன்
  19. கழுங்கடியான்
  20. பொன்மாடசாமி
  21. செங்காட்டுஇருளப்பசாமி
இத்துடன் நொண்டி மாடசாமி சின்னத்தம்பி கிழவனுக்கும் பல்லயம் அளிக்கப்படும்
தெய்வங்களின் சிறப்புகள் :
1.புதியவராஜா
புதியவராஜா தான் கோவிலின் தலைமை ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவர் மலையாலம் பேசக்கூடிய கேரளாவில் வாசம் செய்கின்றார்;. உலகிலுள்ள அத்துனை ராஜாகளுக்கும் இவரே தலையாயவர். இவர் எப்பொழுதும் தங்க தொட்டிலில் தான் அமர்ந்திருப்பார்.
2.வெள்ளையராஜா
வெள்ளையராஜா இரண்டாவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார்;. இவருக்கு வாய்ப்புட்டு போடப்பட்டுள்ளது அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை
3.சின்னத்தம்பிராஜா
சின்னத்தம்பிராஜா மூன்றாவது ராஜா இவர் சைவமாக அமர்ந்துள்ளார்;. இவருக்கு வாய்ப்புட்டு போடப்பட்டுள்ளது அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை
4.சுந்தரராஜா
சுந்தரராஜா நான்காவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார்;. இவருக்கு வாய்ப்புட்டு போடப்பட்டுள்ளது அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை
5.நீலமேகராஜா
நீலமேகராஜா ஐந்தாவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார்;. இவருக்கு வாய்ப்புட்டு போடப்பட்டுள்ளது அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை
6.வனராஜா
வனராஜா ஆறாவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார்;. இவருக்கு வாய்ப்புட்டு போடப்பட்டுள்ளது அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை
7.சீதாராமராஜா
சீதாராமராஜா ஏழாவது மற்றும் கடைசி ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார்;. இவருக்கு வாய்ப்புட்டு போடப்பட்டுள்ளது அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை
8.இளையபெருமாள்
இளையபெருமாள் மந்திரியாக அமர்ந்துள்ளார் இவரும் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்புட்டு போடப்பட்டுள்ளது அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை
9.ராஜகாளியம்மன்
ராஜகாளியம்மன்; சைவமாக அமர்ந்துள்ளார். காளியம்மன் வேறு எங்கும் சைவமாக இல்லை
10.மந்திர மூர்த்தி
11.பெச்சியம்மன்
12.ராக்காச்சியம்மன
13.பாதாள கண்டி
14.அக்னி இருளப்பசாமி
15.மதுரை வீரன்
16.மாசாணமுத்து
17.பாதாள ராக்கு
18.வைரவன்
19.கழுங்கடியான்
20.பொன் மாடசாமி
21.செங்காட்டு இருளப்பசாமி
22.சின்னத்தம்பி தாத்தா
ஆராதணை முறைகள்
இத்திருக்கோவிலில் வருட ஆராதணை முறை பின்பற்றப்படுகிறதுஇஅதாவது வருடத்திற்க்கு ஒருமுறை மட்டும் ஆராதணை நடக்கும். வைகாசி மாதம் கடைசி வெள்ளி அன்று கோவில் கொடை விழா நடைபெறுவதற்க்கு எட்டு தினங்களுக்கு முன்பு ஆராதணை நடத்தி கொடி ஏற்றப்படும்.பின்பு ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படும. அவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பர்
கொடி ஏற்றிய எட்டாவது நாள் வெள்ளி அன்று இரவு 8.00 மணிக்கு மேல் விநாயகருக்கு ஒரு தேங்காய் விடலையும் ஒரு சூடமும் அளிக்கப்படும். பின்பு முதற்படி கோவிலில் மேளதாளம் முழங்க வாழைமரம் நடப்படும்.அதன் தொடர்ச்சியாக முனியசாமிக்கு முதல் மரியாதையாக சூடம் ஏற்றப்படும். அதன் தொடர்ச்சியாக கொடி அழைத்தல்(சாமி இருக்கும் மேற்கு திசையை நோக்கி தேங்காய் உடைத்து சாமிகளை அழைத்தல்) நடைபெறும்.
அடுத்தபடியாக சாமிக்கு அலங்காரம் செய்து ஆராதணை நடத்தி சாமியாட்டம் ஆடும் மருளாடிகளுக்கு சந்தனம் குங்குமம் வைத்து மேளம் தட்டி அருள் ஏற்றப்படும்.பின்பு புதியவராஜா சாமியிடம் அருள் பெற்று காவல் தெய்வங்கள் வைரவனும் இருளப்பசாமியும் ஊர் சுற்றி வருவார்கள். அதன் தொடர்ச்சியாக பொன்மாடசாமி மயான வேட்டைக்கு செல்லும்.இவர்கள் ஊர் சுற்றி வரும்போது அக்னி இருளப்பசாமி மட்டும் ராஜாவிற்க்கு காவல் இருப்பார். இதன் தொடர்ச்சியாக ஆசாணம் என்றழைக்கப்படும் எல்லை தெய்வத்திற்க்கு ஒரு தேங்காய் பழம் மாலை அளிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக இரவு 11.00 மணிக்கு மேல் காட்டிற்குள் இருக்கும் கோவிலுக்கு செல்வார்கள்.
அங்கு சென்று முதலில் ஒரு சேவல் தோரண காவு கொடுக்கப்படும்.அடுத்து வாழைமரம் நட்டப்படும். அதன் தொடர்ச்சியாக மீண்டும் கொடி அழைத்து சாமிகளுக்கு அலங்காரம் செய்து பொங்கல் வைக்க தண்ணீர் எடுக்க நதிக்குச் சென்று பொங்கல் பாணைகளுக்கு சந்தனம் குங்குமம் வைத்து ஆராதணை நடத்தி பொதுப்பாணையை புதியவராஜாவின் தலையில் வைத்து பாணையை கொண்டுவந்து பொங்கள் வைக்கப்படும்.பொங்கல் வைக்கும்
போது ஒரு தேங்காய் உடைத்து ஒரு ஆராதணை நடத்தி பின்பு பொங்கல் முடித்த பின் தலுகை(பொங்கல்)வைத்து ஒரு ஆராதணை நடத்தபடும்.
அதன் தொடர்ச்சியாக காளியம்மனுக்கு சைவ காவு கொடுக்கப்படும்.அப்பொழுது அம்மனுக்கு தனி அலங்காரம் செய்யப்படும்.அடுத்தபடியாக அக்னி இருளப்பசாமியின் தலைமையில் அக்னி இருளப்ப சாமி மதுரை வீரன் மாசாண முத்து வைரவன் கழுங்கடியான் பொன் மாடசாமி நொண்டி மாடசாமி செங்காட்டு இருளப்ப சாமி என அனைத்து சாமிகளுக்கும் அசைவ காவும் அருந்த மதுவும் கொடுத்து பசியமர்த்தப்படும். அப்போது புதியவராஜா அக்னி இருளப்ப சாமி மதுரை வீரன் மாசாண முத்து வைரவன் கழுங்கடியான் பொன் மாடசாமி நொண்டி மாடசாமி செங்காட்டு இருளப்ப சாமி என அனைத்து சாமிகளும் மக்களுக்கு அருள்வாக்கு அளிப்பார்கள். அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு தேங்காய் உடைத்து ஒருஆராதணை நடத்தப்படும்.அதன் பின்பு பொங்கல் பாணை புதியவராஜாவின் தலையில தூக்கி விடப்படும். தொடர்ச்சியாக ஒரு செம்மறி ஆட்டுக்கிடாய் வடக்கு வாசலில் வெட்டப்படும்.பின்பு பொங்கல் பாணை புதியவராஜாவின் சக்தியால் ஊரில் அமைந்துள்ள முதற்படி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு மஞ்சள் நீராட்டு முடித்து முதற்படிக்கோவிலில் மீண்டும் ஒரு தெங்காய் உடைத்து ஆராதணை செய்யபடும். பின்பு படிமார்த்ததாரர்களுக்க பிரசாதம் வழங்கி கொடை திருவிழா நிறைவுபெரும்.
எட்டு நாள்கள் கழித்து ராஜாவிடம் ஒரு பொங்கல் வைத்து திருவிழா தடை நீக்கப்படும்
ஆய்வாளர் : பெ.மாரிச்செல்வம் இ.க.தமிழ்
தகவல் : 1.பெ.பழனிமுருகராஜா
2.வ.இருளப்பராஜா
3.ஜெ.குருசாமி
4.க.மாரிமுத்து

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் திருப்பரங்குன்றம் அருள்ம...