Wednesday, August 10, 2022

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள்

  1. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்
  2. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
  3. பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்)
  4. திருத்தணி முருகன் கோயில்
  5. திருச்செந்தூர் முருகன் கோவில்
  6. கோவை, பேரூர் பட்டீசுவரர் கோயில்
  7. நாற்று நடவுத் திருவிழா (சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சுந்தரர் திருப்பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் மள்ளராகவும் உமாதேவி மள்ளத்தியாகவும் நாற்று நடவு செய்வர்)
  8. கோவை, கோனியம்மன் கோயில்
  9. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
  10. சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
  11. கழுகுமலை வெட்டுவான் கோயில்
  12. இராசபாளையம் பள்ளர் குல மக்களின் சித்திர வெண்கொற்றக்குடைத் திருவிழா
  13. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் (இக்கோயில் கோபுரமே தமிழ்நாடு அரசு முத்திரையாக உள்ளது)
  14. சாத்தூர்-இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
  15. சமயபுரம் மாரியம்மன் கோயில் 
  16. வத்தலகுண்டு மாரியம்மன் கோயில்
  17. பெரம்பலூர் மாரியம்மன் கோயில்
  18. பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்

என 400 கும் மேற்பட்ட கோவில்களில் முக்கியமாக மூவேந்தர்கள் கட்டிய கோவில்களில் இன்றுவரை முதல் மரியாதை, தேர் இழுக்கும் உரிமை மற்றும் பரிவட்டம் பெறுபவர்களாக இந்த மூத்த வேளாண் குடி மரபினரான பள்ளர்/மள்ளர்/தேவேந்திர குல வேளாளர்கள் விளங்குகின்றனர்.

இந்த கோவில்களில் இன்று அர்ச்சகர்களாக உள்ள பிராமணர்களிடம் கேட்டு பாருங்கள், யார் இந்த கோவில்களை காட்டியது ? , யார் இந்த கோவில்களிலில் பரிவட்டம் பெறுவார்கள் ? என்று! அவர்கள் சொல்வார்கள் இக்கோவில்களை கட்டியது பாண்டியர்கள் என்றும் , பள்ளர்களே இக்கோவில்களில் முதல் மரியாதையை பெறுபவர்கள் என்றும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத நிலத்தை தோற்றுவித்து மருதவேலி / மருதந்துறை (திருநெல்வேலி) ஊரின் பொறுநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் மேற்கே பொதிகை மலையில் இருந்து கிழக்கே ஆதிநித்த குடும்ப நல்லூர் (ஆதிச்சநல்லூர்) / வங்ககடல் வரை ஆற்றங்கரை நாகரீகத்தை தோற்றுவித்து குடும்பம், ஊர், நாடு, நகரங்கள் மற்றும் பல புராதன கோயில்களை கட்டியெழுப்பி ஆட்சிபுரிந்தவர்கள் பள்ளர்/மள்ளர் எனும் பாண்டியர்கள் எனபதை எவராலும் மாறுங்க முடியாது.

பாண்டிய மண்ணை ஆண்ட பாண்டிய மரபினரான பள்ளர் குலத்தார்க்குப் ‘பரிவட்டம்’ கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து பாண்டியர்கள் வெற்றிகளை கொன்டாடும் விழா வரை அணைத்து ஆதாரங்களும் இன்றுவரை உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது. பல ஊர்களின் கோயில் திருவிழாக்களில் முதல் மரியாதை/மண்டகப்படி, பரிவட்டம் பெறுவதோடு, அனைத்து கோவில்களிலும் மடங்கள் பலவற்றை கொண்ட சாதியாக விளங்கிய பள்ளர்கள் தங்களை பூர்வகுடியாக நிருபித்து பாண்டியர்கள் என்று பறைச்சாற்றுகின்றனர்.

[சான்று]


இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 2022

இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 2022

உலகின் மூத்த தமிழ் குடி யாம் மள்ளர்குடி தெய்வத்திற்கே படியளக்கும் தெய்வேந்தர்களின் வழிவந்த இருக்கண்குடி தெய்வேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சக்காபுக்கா வம்சத்தினர் புதையுண்ட மாரியம்மனை எடுத்து அந்த உக்கிரமான தெய்வத்தை சாந்தப்படுத்தி மகிழ்விக்கும் விதமாக நடுநிசியில் இரத்த பலிகொடுத்து ஊர்பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

ஊர் குடும்பர் முன்னிலையில் தலைவாசல் முன்பு அறமடம் அமைத்து பக்தர்களுக்கு சேவை செய்து வந்திருக்கிறார்கள். அம்மனுக்கு நித்தியகால பூஜைக்கு ஊர்பொதுமக்கள் அரிசி கொடுத்து வழிபாடு செய்திருக்கிறார்கள்.

அந்த நினைவுகள் நடைமுறையாக இன்றளவும் பங்குனிப்பொங்கல் அன்று வீட்டிற்கு ஒரு கைபிடி அரிசி கொடுத்து கோயில் பூசாரிகளால் அன்று இரவு அம்மனுக்கு சிறப்பு பொங்கல் வைத்து படையல் படைக்கப்படுகிறது. இருக்கண்குடி தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் அந்த காலத்து வழிபாட்டு முறையை நினைவுபடுத்தும் விதமாக இன்றும் தேவேந்திரர்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பங்குனி கடைசி வெள்ளி நடுஇரவு பூஜை நடைபெற்று வருகிறது.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ஈராத்துக்காரியின் நடுநிசி பூஜையான அன்றைய நாளில் இருக்கண்குடி மாரியம்மன் மன மகிழ்வுடன் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பாள்.

அனைவரும் பங்குனிப்பொங்கல் திருவிழா 2022ல் கலந்து கொண்டு அம்மன் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

01.04.2022 அம்மனுக்கு உகந்த மஞ்சள் நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து அம்மனை மனம் குளிர வைத்து திருவிழா தொடக்கம்

08.04.2022 மாலை ஊர் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், இரவு 10 மணிக்கு மேல் சென்று இரவு 12.00 மணியளவில் நடு ஜாமத்தில் மீண்டும் நடைதிறந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை.

09.04.2022 மாலை முளைப்பாரி எடுத்து அலங்காரத்துடன் ஊர்வலம் வந்து அம்மன் கோவிலுக்கு செல்லுதல்

10.04.2022-காலையில் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து திருவிழா முடிவடைகிறது. இரவு கலை நிகழ்ச்சிகள்.

அனைத்து மக்களும் பங்குனி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு : இருக்கண்குடி இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள்

Sunday, August 7, 2022

இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கரும்புத் தொட்டில் நேர்த்திக் கடன் செலுத்துதல்

இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கரும்புத் தொட்டில் செலுத்துகிறார்கள்,

எதற்காக இந்த கரும்புத் தொட்டில் செலுத்துகிறார்கள் என்றால் குழந்தை இல்லாத தம்பதியினர் அம்மனை வேண்டி விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்ற பின் அக்குழந்தையை கரும்புத் தொட்டிலில் வைத்து கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்து நேர்த்திக்கடனை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்நிகழ்வு மேளதாளம் முழங்க ஆற்றுக்கு அருகில் தம்பதியினர் குளித்து மஞ்சள் நீரில் நீராடி அம்மனை மனதார வேண்டி நினைத்து ஆனந்தமாக குழந்தையை கரும்புத் தொட்டிலில் படுக்க வைத்து தம்பதியினர் கரும்புத் தொட்டிலை சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடனை முடிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி குடும்பத்திற்கு ஏற்றார் போல் சிறியதாகவோ அல்லது வெகு விமர்சையாகவும் நடத்தப்படுகிறது.

தினமும் குழந்தை பெற்ற தம்பதியினர் இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

குழந்தை இல்லாத தம்பதியினர் அருள்மிகு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் வந்து நம்மிடம் முறையிட்டு குழந்தை வரம் கேட்டால் அந்த ஆயிரம் கண்ணுடையாள் குழந்தை இல்லாத தம்பதியினருக்காக குழந்தை வரம் தருவாள்

ஓம் சக்தி!
பராசக்தி!

YouTube


Saturday, August 6, 2022

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடக்கமாக இருக்கண்குடி "ஊர் குடும்பனார்" மற்றும் ஊர் நாட்டமை அவர்களுக்கு கோவில் பூசாரி பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடக்கமாக இருக்கண்குடி "ஊர் குடும்பனார்" மற்றும் ஊர் நாட்டமை அவர்களுக்கு கோவில் பூசாரி பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நாள் : 05-08-2022 இடம் : இருக்கண்குடி மாரியம்மன் கோவில்

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில்

மூலவர் : மாரியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : அர்ச்சுனா, வைப்பாறு
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : இருக்கன்குடி
மாவட்டம் : விருதுநகர்
மாநிலம் : தமிழ்நாடு

வரலாறு 1

ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இங்குள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள். எனவே தான் இங்குள்ள மாரி இருக்கங்(ன்) குடி மாரி ஆனாள். ஆக, அம்மனை தரிசிப்பதுடன் இருகங்கைகளிலும் நீராடி, ஒரே நேரத்தில் முப்பெரும் பலனை அடையலாம். மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுணன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே அர்ச்சுணன் ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் நீராடி மகிழ்ந்தனர். அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனி புராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகன் என்ற வேடன் தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனது இந்த செயலால் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது அயோத்தியை ஆண்ட ராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமாயண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது). தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவ விமோசனத்திற்காக சிவமலையில் சிவபெருமானை நிலை நிறுத்தி, வணங்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தன் மாலைக்கடனை முடிக்க தண்ணீர் தேடி கிடைக்காததால் வருந்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக் குடத்தை அகத்தியர் இங்கு புதைத்து வைத்திருப்பதாக கூறினான். இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்து, அங்கு ஏற்கெனவே ஒடிக்கொண்டிருக்கும் அர்ச்சுணா நதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

வரலாறு 2

மதுரை அருகிலுள்ள சதுரகிரி மலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்பாள் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. “”சித்தரே! அர்ஜுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா,” என்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமி பசுஞ்சாணம் சேகரிக்கும் தொழில் செய்தாள். ஒரு சமயம் தரையில் வைத்த சாணக்கூடையை தூக்க முடியவில்லை. பெரியோரை அழைத்து வந்தாள். அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன், அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

வரலாறு 3

இரட்டை தீர்த்தம்

வனவாசம் சென்ற அர்ஜுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. இந்நதி அவனது பெயராலேயே அழைக்கப்பெற்றது. இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூஜைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். அப்போது பிறந்த நதி வைப்பாறு எனப்பட்டது. இவ்விரு நதிகளும் கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக “இருகங்கைக்குடி’ எனப்பட்ட ஊர் “இருக்கன்குடி’ என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.

ஆதி அம்பிகை

அம்பாள், இங்கு சிவ அம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை பக்தர்கள் காணலாம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில், அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.

கரும்புத் தொட்டில்

குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்ச்சை (நேர்த்திக்கடன்) செய்வதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வயிற்று வலி தீர மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர்.

பிரார்த்தனை தலம்

பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்’ என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருக்கண்குடி பெயர் உருவான விதம்

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது. இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இங்கு நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் கங்கையை வேண்டி தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும் இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுணன் என்பதால் இதற்கு அர்ச்சுணன் ஆறு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்

வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை

பங்குனி பொங்கல் 2015 ஊர் குடும்பர், நாட்டாமை, காலாடி அவர்களுக்கு கோவில் பூசாரி மரியாதை செய்தல்

 இருக்கன்குடி கிராமத்தில் தேவேந்திரகுல உறவின் முறையினர் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளி அன்று இரவு 10மணிக்கு மேல் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனை வேண்டி ஊர் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து அம்மனை வணங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க ஊர் நாட்டாமை மற்றும் காலடி தலைமையில் பொதுமக்களை ஒரு திரளாக அழைத்து பெருமாள் கோவில் வழியாக  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சென்று பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது ஊர் நாட்டாமை மற்றும் காலாடிக்கு திருக்கோவில் அறங்காவலர் குழு சார்பாக மரியாதை அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் ஆடி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியானது ஊர் மக்களுக்கு மட்டுமின்றி கோவில் தரிசனத்திற்கு வரும் மக்களுக்கும் கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது.

Irukkanguid Panguni Pongal 2015
https://youtu.be/2Q3sf18Bxxw

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடக்கமாக இருக்கண்குடி "ஊர் குடும்பனார்" மற்றும் ஊர் நாட்டமை அவர்களுக்கு கோவில் பூசாரி பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடக்கமாக இருக்கண்குடி "ஊர் குடும்பனார்" மற்றும் ஊர் நாட்டமை அவர்களுக்கு கோவில் பூசாரி பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நாள் : 05-08-2022 இடம் : இருக்கண்குடி மாரியம்மன் கோவில்

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் திருப்பரங்குன்றம் அருள்ம...